Posts

தூய பேட்ரிக் இணைப் பேராலயம்- St.Patricks Co-Cathedral (Short History)

Image
  தூய பேட்ரிக் இணைப் பேராலயம் தூத்துக்குடி   235 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட தூய பேட்ரிக் இணைப் பேராலயம் தூத்துக்குடி மாநகரின் சீர்திருத்த திருச்சபையின் முதல் தாய் திருச்சபை . கிபி முதல் நூற்றாண்டில் இயேசு கிறிஸ்துவின் சீடர் புனித தோமா வழியாக இந்தியாவிற்கு கிறிஸ்துவம் வந்துவிட்டது எனினும் தூத்துக்குடியில் 1789 களில் திரு.ராயப்பன் மற்றும் திரு சத்தியநாதன் இருவரும் தூத்துக்குடி பகுதியில் செய்த ஊழியங்கள் மூலம் 200 க்கும் அதிகமான நபர்கள் திருமுழுக்கு பெற்று சீர்திருத்த தமிழ் சபை வடக்கூரில்   உருவாக்கப்பட்டது . இங்கு Rev.J.J. பெஸ்ட் ஹென்றி போப் , Rev . ரிச்சர்ட் போப் (Dr.G.U. போப்பின் இளைய சகோதரர் ) இந்த பகுதியில் 1857 வரை பணி செய்தனர் . இவருக்கு பின்பு 1857 ஆம் ஆண்டு புதியம்புத்தூரை மையமாகக் கொண்டு SPG மிஷனரி ஆக பொருப்பெடுத்தவர் Rev.J.F கேர்ன்ஸ் . இவர் பணி செய்த 1857 முதல் 1873 காலத்தில் தூத்துக்குடி வடக்கூர் சபை புத்துயிர் பெற்றது . Rev.J.F கேர்ன்ஸ் தூத்துக்குடியின் வளர்ச்சிக்கு அரும்பாடு...

அனிதா மேரி பாக்கியம்

சகோதரி அனிதா மேரி பாக்கியம் (1975-2004) "கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும். செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும்" என யோவான் 12:24-ல் வாசிக்கிறோம். இப்படியாக இன்னொரு கோதுமை மணியாக மிஷனெரிகளின் கல்லறை' என்று அழைக்கப்பட்ட பீஹாருக்கு மிஷனெரியாகச் சென்ற சகோதரி #அனிதா_மேரி_பாக்கியம் 2004-ம் ஆண்டு 27-ம் தேதி ஜுலை மரித்தார். இன்று #மால்தோ மக்கள் மத்தி யில் பலநூறு திருச்சபைகள் எழும்பி ஓர் #இராஜ்மஹால்_பேராயம் தோன்றி மால்தோ விசுவாசிகளே ஆயர்களாகவும் பேராயராகவும் உருவாகியிருப்பதைக் காண்கிறோம். தங்கள் ஜீவனைப் பணயம் வைத்து உழைத்து மரித்த இந்த அர்ப்பணமுள்ள ஊழியர்களாலும், அநேகருடைய ஜெபத்தினாலும் ஈகை யினாலும் இது சாத்தியமாயிற்று. இளமைப்பருவம் சகோதரி  அனிதா மேரி பாக்கியம் ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் 1975-ம் ஆண்டு மே மாதம் 11-ம் தேதி தூத்துக்குடியில் பிறந்தார். அவருடைய தந்தை திரு. D.லூக் பால்ராஜ். ஒரு சாதாரண தொழிலாளி, அனிதா சிறுமியாக இருக்கும் போதே அவருடைய தாயார் கால மானார்கள். அனிதாவிற்கு ஒரு அக்காள் மட்டும் உண்டு. அவர் மிகவும் ஏழ்மை யான குடும்பத்தில் பிறந்...

St.Patrick's History in Tamil

Image
அயர்லாந்தின் அப்போஸ்தலர் தூய பேட்ரிக் அவர்களின் வாழ்க்கை வரலாறு கிபி 385ம் ஆண்டு பிரிட்டன் தேசத்தின் தெற்கு வேல்ஸ் பகுதியில் ரோமானிய பெற்றோரான கல்பூர்ணியஸ் மற்றும் கொன்சேசாக்கு   பிறந்தவர் பேட்ரிக். கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கிறிஸ்துவை பற்றி என்னாத நாத்திகராகவே வாழ்ந்து வந்தார். 16 ஆவது வயது சிறுவனாக இருந்தபோது கொள்ளை கூட்டத்தினரால் கடத்தப்பட்டு அயர்லாந்து தேசத்தின் மில்ச்சு என்ற ஒருவரிடம் அடிமையாக விற்கப்பட்டார்.  அங்கு அவருக்கு ஆடு மற்றும் பன்றிகளை மேய்க்கும் வேலை கொடுக்கப்பட்டது. முன்பு ஆண்டவரை தேடாமல், நினையாமல் இருந்த சிறுவன் பேட்ரிக் ஆண்டவரின் பிரசன்னத்தை உணர்ந்து அதிகாலையில் சீக்கிரமாய் எழும்பி ஜெபித்து பின் வேலைகளை செய்ய ஆரம்பித்தார். அந்நிய தேவதைகளுக்கு பலியிட்டு வழிபாடு நடத்துதல் இவரை மிகவும் பாரபடுத்தியது. இதற்காக ஊக்கமாக ஜெபித்தார். பின்னானில் ஆண்டவரின் ஊழியத்தை செய்ய தன்னை அர்பணித்தற்கு இதுவே ஒரு முக்கிய காரணம். எப்படியும் இந்த அடிமை வேலையிலிருந்து விடுதலை ஆக வேண்டும் என்று விரும்பினார்.  ஆறு ஆண்டு அடிமைத்தனத்திற்கு பின்  ஒரு நாள் ஜெப...

Rev.J.F.Hernes Rev.J.F கேர்ன்ஸ்

Image
நம் தூய பேட்ரிக் இணைப் பேராலயத்தின் தந்தை  "Rev.J.F கேர்ன்ஸ்" தினம். வட கிழக்கு நெல்லை அப்போஸ்தலர் Rev.ஜேம்ஸ் பிளெமிங் கேர்ன்ஸ் 1825ம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்த Rev.J.F கேர்ன்ஸ் தனது இளம் வயதிலேயே கடவுள் பக்தி மிக்கவராக வளர்க்கப்பட்டார். தனது வாலிப வயதில் மிசினரி பணியின் அழைப்பை ஏற்று 1849ம் ஆண்டு இந்தியா வந்தார். இடையன்குடியில் பேராயர் கால்டுவெல் அவர்களிடம் 1849-1854 வரை சபை ஊழியராக பயிற்சி பெற்றார். 12.03.1854 ல் உதவி குரு (டீக்கன்) பட்டம் பெற்று முதலூரில் பணி செய்தார். 24.03.1855 ஹேனா எலிசபெத் ராபர்ட் எண்பாரை திருமணம் செய்து கொண்டார். J.F கேர்ன்ஸ் - ஹேனா தம்பதியருக்கு 10.08.1855 அன்று மேரி எமிலிபார்ன் என்ற மகள் பிறந்து எட்டு மாதத்தில் 26.04.1856ல்  கர்த்தருக்குள் மரித்து தூத்துக்குடியில் அடக்கம் செய்யப்பட்டாள். இதற்கிடையே பணிமாற்றம் செய்யப்பட்டு 1855-56வரை சாயர்புரத்தில் பணி செய்தார். இதன் பிறகு 29.09.1856ல் எட்வர்ட் வெஸ்லி பிளஸ்ஸிங் என்ற மகனும், 11.08.1858 இல் வெண்ணி அமெல்யா என்ற மகளும் 18.06.1861ல் ஆர்தர் என்ற மகன் உட்பட மூன்று பிள்ளைகள் பிறந்தனர்.  S.P.G மிஷினின் ஜி...

பேராயர் ராபர்ட் கால்டுவெல் & ஜி யு போப் - தமிழக ஆளுநர்

                                    தமிழக ஆளுநருக்கு நன்றிகள்!! "சங்கு சுட்டாலும் மேன்மை தரும்", "கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே". மூதுரை  இன்று தமிழ் அறிஞர்கள்   பேராயர் ராபர்ட் கால்டுவெல் மற்றும் டாக்டர் ஜி யு போப் குறித்து தமிழக ஆளுநர் வன்மத்தோடு விமர்சனங்களை வீசி இருந்தாலும், தமிழகம் முழுவதும் இன்று அவர்கள் தேடும், பேசும் பொருளாகியுள்ளனர். இவர்கள் யார்? எங்கிருந்து வந்தனர்? எதற்காக வந்தனர்? என்ன செய்தனர்? படித்தனரா? பட்டம் பெற்றனரா? தமிழுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு? என்பதை அனைவரும் அறிந்து கொள்ளும் வாய்ப்பை அள்ளிக் கொடுத்திருக்கிறார் தமிழக ஆளுநர்.  குறிப்பிட்ட மக்கள் மட்டுமே அறிந்திருந்த இந்த அறிஞர் பெருமக்களை உலகறிய செய்த ஆளுநருக்கு நன்றிகள்.  "நசுக்கப்படும் ஒரு மூட்டை பூச்சியில் இருந்து புது உயிர்கள் அநேகம் பெருகும்" இதைப் போலத்தான் கிறிஸ்தவமும், தமிழ் மொழியும் நசுக்க நினைத்தால் கனவிலும் இயலாது. இந்த உண்மைகளை எடுத்துக்காட்டிய ஆளுநருக்கு நன்றி, நன்றி, நன்றி., ...

அசன பண்டிகை Asanam Festival

Asanam Festival    அசன பண்டிகை "நமக்கான ஐக்கிய விருந்தல்ல அசனம், அயல் ஜனத்திற்கான அன்பின் விருந்தே அசனம்"  அசனத்திற்கு திட்டமான வரலாறு இல்லையென்றாலும் நம் மிசினரிகளின் தூர தரிசனத்தையும் ஆத்தும பாரத்தையும் இதன் வழியாக கான முடியும். அசனத்தின் ஆரம்பம்: 1850-70 போன்ற காலங்களில் கொடிய காலரா பஞ்சம் போன்றவற்றினால் உருகுலைந்து போயிருந்த மக்களுக்கு ஆலயத்தில் இருந்து ஆகாரம் கொடுத்து அவர்களை ஆதரித்தனர். ஆலய பிரதிஷ்டை பண்டிகையின் போது ஆலயத்தின்  மகிமையையும் ஆண்டவரையும் புறமதத்து மக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் அவர்களை ஆலயத்துக்கு அழைத்து உணவு பரிமாறப்பட்டு ஆண்டவரின் அன்பை ருசிக்கும் படி அசனத்தின் வாயிலாக வழிவகை செய்யப்பட்டது. ஜாதியின் பெயரால் பிளவுபட்டு திருச்சபையின் வளர்ச்சி குன்றியிருந்த காலத்தில் விசுவாசிகள், சபை ஊழியர்கள்  ஏன் குருவானவர்களில் கூட ஜாதியால் துண்டாடப்பட்ட நேரத்தில் மிஷனரிகள் மூலம் ஏழை, எளியவர், பெரியவர், சிறியவர் அந்தஸ்து பாராமல் ஒரே வகையான உணவை சமமாக பந்தியில் உட்கார வைக்கப்பட்டு உணவு பரிமாறப்பட்டு ஜாதி வித்தியாசம் கலையப்பட முயற்சி எடுக்கப்பட்டது. ஏழை எளிய...

சங்கம் நமது உரிமை

  சங்கம் நமது உரிமை பழைய ஏற்பாட்டில் காணிக்கையை கொண்டுவந்து ஆசாரியனிடத்தில் கொடுத்தார்கள் அதை தனக்காகவும் தன் குடும்பத்திற்கும் வைத்துக்கொன்டார்கள். ஆசாரியர்கள்தங்களுக்கு போக மிச்சத்தை ஏழைகளுக்கு கொடுத்தார்கள்.   புதிய ஏற்பாடு ஆதி திருச்சபையில் யாராவது ஒருவர் பொருளாதார சிக்கலை சந்தித்தபோது மற்றவர்கள் உதாரத்துவமாக உதவி செய்து அவர்கள் தேவையை சந்தித்தார்கள். (அப்2:32-37, 11:29,30) இதற்காக பலர் தமாக முன்வந்து தங்கள் சொத்துகளை   விற்று அப்போஸ்தலருடைய பாதத்தில் வைத்து பொதுவாய்   அனுபவித்தார்கள். எதையும்   தங்களுடையது என்று சொல்லவில்லை   நம் மண்ணில் வந்த மிஷினரிகளும் குருவானவரும் ஜீவனும் பண்ண ஆலயத்தில்படைக்கப்படும் அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் பொருள் காணிக்கைகள் போதுமானவையாக இருந்தன. ஆனால் அதையும் தாண்டி அவர்களுடைய தேவையை சந்திப்பதற்காக சபை விசுவாசிகள் ஒவ்வொருவரும் சிறிய அளவு பணமாக காணிக்கை படைக்கும் ஒழுங்கு முறை திருச்சபையில்   ஏற்படுத்தப்பட்டது. அது குருவானவருக்கும்   ஊழியர்களுக்கும் சம்பளமாக அவர்களது தனிப்பட்ட தேவையை சந்திப்பதற்கு உதவியாக அம...