அசன பண்டிகை Asanam Festival

Asanam Festival  அசன பண்டிகை


"நமக்கான ஐக்கிய விருந்தல்ல அசனம், அயல் ஜனத்திற்கான அன்பின் விருந்தே அசனம்"

 அசனத்திற்கு திட்டமான வரலாறு இல்லையென்றாலும் நம் மிசினரிகளின் தூர தரிசனத்தையும் ஆத்தும பாரத்தையும் இதன் வழியாக கான முடியும்.


அசனத்தின் ஆரம்பம்:

1850-70 போன்ற காலங்களில் கொடிய காலரா பஞ்சம் போன்றவற்றினால் உருகுலைந்து போயிருந்த மக்களுக்கு ஆலயத்தில் இருந்து ஆகாரம் கொடுத்து அவர்களை ஆதரித்தனர்.

ஆலய பிரதிஷ்டை பண்டிகையின் போது ஆலயத்தின்  மகிமையையும் ஆண்டவரையும் புறமதத்து மக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் அவர்களை ஆலயத்துக்கு அழைத்து உணவு பரிமாறப்பட்டு ஆண்டவரின் அன்பை ருசிக்கும் படி அசனத்தின் வாயிலாக வழிவகை செய்யப்பட்டது.

ஜாதியின் பெயரால் பிளவுபட்டு திருச்சபையின் வளர்ச்சி குன்றியிருந்த காலத்தில் விசுவாசிகள், சபை ஊழியர்கள்  ஏன் குருவானவர்களில் கூட ஜாதியால் துண்டாடப்பட்ட நேரத்தில் மிஷனரிகள் மூலம் ஏழை, எளியவர், பெரியவர், சிறியவர் அந்தஸ்து பாராமல் ஒரே வகையான உணவை சமமாக பந்தியில் உட்கார வைக்கப்பட்டு உணவு பரிமாறப்பட்டு ஜாதி வித்தியாசம் கலையப்பட முயற்சி எடுக்கப்பட்டது.

ஏழை எளிய மக்களை நினைவு கூர்ந்து, அவர்கள் மேல் அன்பு வைத்து அவர்கள் பசியாரத்தக்கதாக ஆண்டுக்கு ஒரு முறை தர்மசகாயப் பணிகள் அசனத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

இவ்வாறு அசனத்தின் ஆரம்பம் எவ்வாறாயினும் இன்று எப்படி பொருளுணர்ந்து கொண்டாடுகிறோம் என்பதே முக்கியம்.

எப்படி கொண்டாட வேண்டும்:

அசன பண்டிகை வயிற்றுக்கு கொடுக்கப்படும் போஜனமாக மாத்திரமல்ல ஆத்துமாவிற்கு கொடுக்கக் கூடிய வசன போஜனமாக இருக்க வேண்டும்.


உற்சாகத்தோடு ஆலயத்துக்கு வரும் மக்களை பரலோகத்தின் நிரந்தர உறுப்பினராக முயற்சி செய்யும் பண்டிகையாக இருக்க வேண்டும்.


வானத்தைத் தொட நிற்கும் கோபுரங்கள் வல்லவர் மகிமையை கூறுவது போல வயிறார சாப்பிட்டு வல்லவரின் மகிமையை உணர்ந்து செல்லும் பண்டிகையாக இருக்க வேண்டும்.


 இந்த எளியோரில் ஒருவனுக்கு எதை செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் எனும் ஆண்டவரின் வாக்கின்படி அசனம் கர்த்தருக்கு செலுத்தும் கடன் என்பதை உணர்ந்து கொள்ளும் பண்டிகையாக இருக்க வேண்டும்.


 எளியோருக்கானதை நாம் எடுத்துக் கொள்வது சாபம்! வாரி கொடுத்தால் வரும் ஆசீர்வாதம்!


 எவரேனும் செய்வார் என்பது மனதின் எண்ணம், நீ செய்ய வேண்டும்! உன் பங்கு இருக்க வேண்டும் என்பது ஆண்டவரின் பெரும் ஏக்கம்


ஓலை கொட்டகையில் ஆரம்பித்து இன்று ஒய்யார கோபுரமாய் உயர்ந்து நிற்கும் பேட்ரிக் திருச்சபை, சண்டை சச்சரவின்றி, ஏற்றத்தாழ்வின்றி, கிறிஸ்துவின் நடமாடும் சாட்சிகளாய், முன்மாதிரியாய் வாழ்ந்து காட்ட இந்நாளில் தீர்மானிப்போம்.


 அனைவருக்கும் தூய பேட்ரிக் இணை பேராலயத்தின் 26 வது அசன பண்டிகை நல்வாழ்த்துக்கள்.


 கர்த்தர் நம் அனைவரோடும் இருப்பாராக. ஆமென்.

Comments

Popular posts from this blog

St.Patrick's History in Tamil

தூய பேட்ரிக் இணைப் பேராலயம்- St.Patricks Co-Cathedral (Short History)